Tamil 10

Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Friday, May 15, 2009

கோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை

இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும் 
ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.

இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.
அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர். 
போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்
டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார். 

பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் பஞ்சாப் போன பின் சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்..

தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.

Top Tamil Blogs by Tamilers

Tuesday, May 12, 2009

ரோமப் பேரரசன், சர்க்கஸ் விளையாட்டு மற்றும் கிளாடியேட்டர் படமும்:

ரித்திரத்தை ஒரு நிமிசம் திரும்பிபாருங்க!. அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒன்னுதான். நாம வாழனும்னா யார வேணா, எப்ப வேணா கொல்லலாம்.ஒரு அரசன் எப்படா சாவான் அப்படினு மக்கள் எதிர்பார்த்த அரசர்கள் வரிசைல முதலிடம் பிடிக்கும் மன்னன் ரோமப் பேரரசன் கலிக்யூலா.கிளாடியேட்டர் படத்துல வர மிகப் பெரிய அரங்கமும் அதில்மனிதர்களோடு மனிதர்களும்,விலங்குகளோடு மனிதர்களும்விளையாடும் கொடூர விளையாட்டான அந்த கால சர்க்கஸ் விளையாட்டைகண்டுபிடித்தவன் இந்த கலிக்யூலா. 

கி.பி.37-ல் சர்வாதிகாரி டைபீரியஸ் இறந்தவுடன் அரியணை ஏறியவன் அவனது மருமகனான கலிக்யூலா என்னும் கேயெஸ் சீசர் ஜெர்மானிகஸ்.
சிறுவயதில் ராணுவ வீரர்களுடன் போர்க்களம் சென்று ரத்தமும், சிதறிய உடல்களையும் பார்த்து மகிழ்வான் இந்த கொடூரன். செக்ஸ் விசயத்தில் பிஞ்சிலே பழுத்த பழம். முதன்முதலில் காதல் வயப்பட்டது தன் சொந்த சகோதரியிடம். அரியணை ஏறியவுடன் தன் சகோதரிகளின் கணவர்களை அடித்து துரத்தி விட்டு தன் படுக்கை அறைக்கு சகோதரிகளை கொண்டு வந்தவன்.

நாற்பதாயிரம் பேர் அமரக்கூடிய அந்த மாபெரும் அரங்கத்தில் புலிகளையும், கரடிகளையும் மனிதர்களோடு மோத விட்டு வேடிக்கை பார்த்தான். தினமும் கொண்டாட்டமும், குதூகலமும் ஆக இருந்ததால் அரசு கஜானா காலியாகிவிட்டது. இதனால் வீரர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது.
குறைவான சம்பளத்தின் காரணமாக இளைஞர்கள் போட்டியில் இருந்து விலகிவிட, வயதான கிழவர்களும் உணவில்லாமல் பட்டினி ஆக இருந்த நோஞ்சான் புலிகளும் மோதிக் கொள்வதை பார்த்த மக்கள் ஒழிக என்று கோஷமிட்டனர். அவ்வளவுதான் இதை கேட்ட கலிக்யூலா வீரர்களை ஏவி 
கோஷமிட்ட அனைவரது நாக்கையும் துண்டித்து நடு மைதானத்தில் இருந்த புலிகளுக்கு உணவாக்கினான். மேலும் உணவு பற்றாக்குறை காரணமாக விலங்குகளுக்கு ஜெயில் கைதிகளை கொன்று உணவாக்கினான்.

விபச்சார விடுதிக்கு சென்ற முதல் மன்னனும் இவனாகத்தான் இருக்க வேண்டும். அங்கு அவனுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது, அதை அடுத்த நாளே செய்தான். அரசவையை கூட்டி நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் என் சகோதரிகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த போகிறேன், எனவே எல்லா வி.ஜ.பி களும் தினமும் என் சகோதரிகளை
அனுபவிக்க ஆயிரம் பொற்காசுகள் எனவும், யாரெல்லாம் தினமும் வர வேண்டும் என ஒரு பட்டியலும் போட்டு கொடுத்தான்

உச்சகட்டமாக, தன் குதிரை இன்ஸியேட்டஸ்க்கு அரசவையில் கான்சல் பதவி கொடுத்தான். (கான்சல் பதவி என்பது நம்முடைய மத்திய காபினட் அமைச்சருக்கு சமம்). இறுதியாக தன்னுடைய பிரதான மெய்க்காவலன் 
காஷியஸ் செர்பீயா என்பவனால் குத்தி கொலை செய்யப்பட்டான்.
இவனது வெறியாட்டத்தின் ஒரு பகுதி தான் இது. இன்னும் பல கொடுமைகள் செய்த இவனது இறப்புக்கு ஊரே மகிழ்ச்சியில் திளைத்தது.. இத்தனைக்கும் இந்த் கலிக்யூலா ஜுலியஸ் சீசர் பரம்பரையில் வந்தவன். அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பேரன் ஆவான்...


வெறி பிடித்தவனை பதவியில் அமர வைத்தால் மக்களும் நாடும் என்ன ஆகும் என்பதற்கு இவனே சரியான உதாரணம்....



தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.






Top Tamil Blogs by Tamilers

Thursday, May 7, 2009

முகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலாற்று உண்மை....

தோல்வியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் வரலாற்றில் இருப்பவன் முகமது கஜினி. இந்தியாவுக்கு 16 முறை படையெடுத்து தோல்வியடைந்து மீண்டும் 17-வது முறை வெற்றி கண்ட மாவீரன் என்று இன்றும் பள்ளி புத்தகங்களில் வர்ணிக்கப்படுபவன். ஆனால் உண்மையில் கஜினியின் முதல் படையெடுப்பே வெற்றி தான். 

காபூல் நகருக்கு தெற்கே கி.பி.998 ஆம் ஆண்டு கஜினி என்ற நகரை ஆண்டு வந்தான் கஜினி முகமது..அந்த காலகட்டத்தில் இந்தியா என்றால் அனைவருக்கும் ஒரு வித மயக்கம் இருந்து வந்தது. அந்த மயக்கம் முகமது கஜினிக்கும் வந்தது. மாபெரும் படையுடன் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து சிந்து நதியை கடந்து பஞ்சாப் பீடபூமியை நோக்கி முன்னேறினான். அவனையும் அவனுடைய மாபெரும் படையை தடுத்து நிறுத்தினான் பஞ்சாப் மன்னன் ஜெயபாலன்..ஆனால் அசுரத்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஆப்கன் படையிடம் ஜெயபாலன் படையினரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. முதல் போரிலேயே மாபெரும் வெற்றி பெற்ற ஆப்கன் படையினர் பஞ்சாப் நகரை சூரையாடினார்கள். கொள்ளையடித்த செல்வத்தை ஒட்டகங்களில் ஏற்றவே பல மணி நேரம் செலவிட்டது ஆப்கன் படை. 

கஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்து போய்விட்டது. கி.பி.1000-ல் ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு படையெடுப்பதை ஒரு திருவிழாவாக கொண்டாடினான். ஒவ்வொரு முறையும் இதே கதை, கொலை, கொள்ளை பின்னர் ஊர் திரும்புதல்..சௌராஷ்டிரா, கன்னோசி, மதுரா என வரிசையாக கொள்ளை மற்றும் கொலைகள். கஜினிக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு, தான் வெற்றி பெற்ற மன்னர்களின் விரல்களை வெட்டி சேகரித்து வைத்து கொள்வான். அப்படி சேகரித்தவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

இறுதியாக கி.பி. 1025- ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் பாலைவனத்தை கடந்து குஜராத் நகருக்குள் அடிவைத்தான். அந்தரத்தில் தொங்கும் சிவலிங்கத்தை கொண்ட புகழ் பெற்ற சோமநாதர் ஆலயத்தை நோக்கி மாபெரும் படையுடன் வந்தான். கோயில் தானே என்று அலட்சியம் செய்தவனுக்கு காத்திருந்தது மாபெரும் ஆச்சர்யம்.. ஊர் மக்கள்
ஆயிரக்கணக்கில் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை எதித்து நின்றார்கள்..ஆனால் அசுரத்தனம் நிறைந்த அவன் படை முன்பு ஆன்மீக வீரம் எடுபடவில்லை. அனைவரையும் வெட்டி சாய்த்தான்.. சிவலிங்கத்தை கீழே போட்டு உடைத்து மாபெரும் வெற்றிச் சிரிப்புடன் நின்றான். அன்று அவன் கொள்ளை அடித்த தங்கத்தின் அளவு மட்டும் 6 டன்.


அன்று அவ்வளவு புகழ் பெற்ற கோயிலை சூறையாடியதால் தான் கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதை மட்டும் பெறியதாக எடுத்து கூறினார்கள். அதற்கு முன் கஜினி செய்த அத்தனை அநியாயங்களும் இந்த செயலால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.. இன்றும் நாம் வரலாற்றை தவறாக படித்துக்கொண்டு இருக்கிறோம். 



அன்பர்களே!..இது மதன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் வாசிப்பில் கற்றது..கட்டுரை பயனுள்ளதாக இறுப்பின் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
Top Tamil Blogs by Tamilers