Tamil 10

Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Friday, May 22, 2009

கம்பீரமாய் டெல்லி சென்று காமடியாய் திரும்பி வந்த கலைஞர்



அரசியல் என்றால் ஆப்பு வைப்பதுதான் என்பதை தெளிவாக புரியவைத்துவிட்டார்கள் காங்கிரஸ்காரர்கள். இங்கிருந்து கம்பீரமாக வெற்றி நடையுடன் சென்ற கலைஞரின் காலை உடைத்து வீல் சேரில் அனுப்பி விட்டார்கள். எப்படியாவது தன் வாரிசுகளுக்கு MP பதவி வாங்கியே தீரவேண்டும் என போனவருக்கு முதல் சந்திப்பிலேயே வைத்தார்கள் ஆப்பு.


காங்கிரஸின் முதல் வேண்டுகோளே அழகிரிக்கு மந்திரி பதவி என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் என்பது தானாம். இணை அமைச்சர் பதவி கூட கிடையாது என்று திட்டவட்டமாக சொல்லித்தான் அடுத்த பேச்சையே எடுத்தார்களாம்.

5 காபினட் மற்றும் 4 ராஜ்ய சபா பதவி என்று கேட்டனர். அதில் தன் இரண்டு செல்வங்களுக்கும், பேரனுக்கும் மற்றும் ராசா, பாலு ஆகிய இருவருக்கும். அதிலும் இரண்டு துறையில் தனித்துவம் வேண்டும் என்றார்கள். அதாவது மத்திய மற்றும் இணை அமைச்சர் பதவியும். ஆனால் காங்கிரஸ் அடுத்தடுத்து வைத்தனர் ஆப்பு. 

ஆப்புகளை 1, 2, 3 என வரிசைப் படுத்துவோம்.

1. அழகிரிக்கு மந்திரி பதவி என்ற பேச்சை எடிக்காதீர்கள்.


2. கனிமொழிக்கு ராஜ்ய சபா பதவி கூட தர முடியாது.


3. ஆர்.ராசா மற்றும் டி.ஆர்.பாலு இவர்கள் மந்திரி சபை பக்கமே வரக்கூடாது.


4. தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி தருகிறோம் ஆனால் போன தடவை போல இரண்டு துறை கிடையாது, வெறும் தொலைத்தொடர்பு துறை மட்டும் தான்.


இத்தனை ஆப்பு வைத்தவுடன் கலைஞர் கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்.
ஏற்கனவே பாலு சேது சமுத்திரம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை கடலில் கரைத்துவிட்டார். ராசா ஸ்பெக்ட்ராம் விசயத்தில் ராஜாவாகிவிட்டார். இன்னும் இவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து தன் தலையில் தானே மண்ணைப் போட காங்கிரஸ் தாயாராக இல்லை. 

கலைஞரிடம் ஒரு கேள்வி : ஜயா, பிரச்சாரம் செய்ய முடியாது, நிற்க முடியாது, பொதுமக்களை நேரில் சந்திக்க முடியாது ஆனால் மந்திரி பதவிக்காக இங்கிருந்து விமானம் மூலம் எப்படி உங்களால் டெல்லி செல்ல முடிந்தது?.

கடைசி வரை தமிழன் இளிச்சவாயன் தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்..


தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.
கடைசியாக ஒரு ஓட்டாவது போடுங்க சாமி....



Top Tamil Blogs by Tamilers