Tamil 10

Thursday, April 30, 2009

பேருந்து கட்டணம் குறைப்பு : வாழ்க அரசியல் ! வாழ்க தேர்தல்!:

அன்பர்களே ! இந்த கட்டுரையை படித்தவுடன் வருடம் 
முழுவதும் தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும்.
சில நாட்களாக நான் பேருந்தில் பயணம் செய்யும் போது கட்டணம் மிகவும் குறைவு..LSS பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ . 2.50..ஆனால் சில நாட்களாக வெறும் 2 ரூபாய் தான். மக்களுக்கு ஆச்சர்யம் மற்றும் இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. என்ன ஒரு திறமையான நிர்வாகம் அப்படியே பூரித்துபோனேன்.

தேர்தல் எனும் ஒரு ப்ரம்மாஸ்திரத்தில் அப்படியே மக்களை வீழ்த்தி விட்டனர்.மேலும் M வரிசை பேருந்துகளை சில நாட்களாக காணவில்லை.காலையிலும் மாலையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிமுகம் செய்யப்பட்ட பேருந்துகள் அப்படியே நிரந்தரம் ஆகிவிட்டிருந்தன்..இப்பொழுது இல்லை...

இதை விட பெரிய ஆச்சர்யம்..சொகுசு பேருந்துகள் தான்..
குறைந்த பட்ச கட்டணமே 5 ரூபாய்..ஆனால் இன்று காலை

மாபெரும் அதிர்ச்சி..5 ரூபாய்க்கு பதில் வெறும் இரண்டு ரூபாய் தான். என்ன ஒரு ராஜதந்திரம்..இப்பொழுது அரசு கஜானா காலி ஆகி விடாதா...இல்லை மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைத்துவிட்டனரா....

எப்படி இருந்தாலும் மக்கள் ஒட்டு போடுவது தி.மு.க. அல்லது அ.தி.மு.க... எனவே கேட்க வழியில்லை என்பது தெளிவாக அவர்களுக்கு புரிந்து விட்டது....

எப்படியோ இன்னும் சில நாட்கள் மக்கள் சொகுசு பேருந்திலும் 
சாதாரண கட்டணத்தில் பயணம் செய்யாலாம்.....

பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.....
Top Tamil Blogs by Tamilers

2 comments:

Unknown said...

// அன்பர்களே ! இந்த கட்டுரையை படித்தவுடன் வருடம்
முழுவதும் தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். //


அட... ஏனுங்கோ தம்பி.... நீங்க வேற.....!! இந்த கொஞ்ச நாளையிலையே இவுனுங்க அடிக்கிற ரூட்டி தாங்க முடியல..... !!

எங்க பாத்தாலும் " டேக் டைவர்சன் ..... டேக் டைவர்சன் ......... " ன்னு சொல்லிக்கிட்டு போலீஸ்காரனுங்க கழுத்த அறுக்குறானுங்க...!! கேட்டா... ஸ்டாலின் பேத்தி ... பிரச்சாரத்துக்கு போறாங்க .... !!!! தயாநிதி புள்ள முட்டாய் வாங்க கடைக்கு போகுதுன்ன் சொல்லுறானுங்க....""

ஆப் பாயில் மண்டயுனுங்க .. என்னைக்குத்தான் திருந்த போரானுங்குளோ.......??????

...................

இதெல்லாம் நம்மள ஏமாத்துற டகால்டி வேலைங்கோ தம்பி.... ஏமாந்து ... ஓட்டு போட்டுபுடாதீங்கோவ்......!!!!!!!

வினோத்குமார் said...

thanks for ur comment love....


ur right....but for poor people it helps

Post a Comment