Tamil 10

Monday, June 29, 2009

அடையாளம் ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக)

“சார்! எனக்கு ஒரு சிம்கார்டு வேணும்”
“எந்த கம்பனி, ஏர்டெல், ஏர்செல் இல்ல வோடபோன்”
“எதுல ரேட் கம்மியா இருக்கோ அது கொடுங்க”
“சரி உன்னோட அடையாள அட்டை அப்புறம் வீட்டு முகவரி அத்தாட்சி ரெண்டும் கொடு”
“எதுக்கு சார்”
“அரசாங்க உத்தரவு பா”
“அப்படி எங்கிட்ட எதுவும் இல்ல சார்”
“அடையாள அத்தாட்சி இல்லாம எதுவும் கொடுக்க முடியாது தம்பி”
“வேற வழியே இல்லயா சார், எனக்கு அவசரமா தேவைப்படுது”
“நான் என்னப்பா பண்ணுறது, எதாவது அடையாள அட்டை கண்டிப்பா இருக்கணும் பா, டிரைவிங் லைசென்ஸ் இல்ல ஓட்டு உரிமம் இப்படி எதாவது உன் பெயரில் இருக்கணும்”
“சரி சார்” என சோகத்துடன் வெளியேறினான் முத்து.

முத்து கோவையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, 12ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு
வீட்டுப் பிரச்சினைகளை தாங்க முடியாமல் சென்னைக்கு வேலை தேடி ரயில் ஏறியவன். இங்கு இரண்டு நாட்களாக தன் பள்ளி நண்பன் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடிக் கொண்டு இருக்கிறான்.

17 வயது மட்டுமே நிரம்பிய முத்து, சோகங்களும் சுமைகளுமே சொந்தமான வாழ்க்கையில்
தன் எதிர்காலம் தேடி சென்னையின் இரு கரங்களிலும் தவழ்கிறான் ஒரு மழலை போல.

“டேய்! ராஜா, எனக்கு சிம்கார்டு கிடைக்கல டா, எதாவது அடையாள அட்டை வேணும்மாம்டா” தன் நண்பனிடம் முத்து.
“ஆமாண்ட, எனக்கும் இதுதான் நடந்தது, அதனால தான் நான் எங்கப்பாவோட சிம்கார்டு வைத்து இருக்கிறேன்” என்றான் ராஜா.
“நமக்கு 18 வயது முடியாம, எந்த அரசாங்க அடையாள அட்டையும் வாங்க முடியாது டா” என்றான் ராஜா மீண்டும்.
“அப்படின்னா இங்க பிறந்து வளர்ந்து சுயமா வேலை செய்யணும்னு நினைக்கற நாமெல்லாம் இருந்தும் அடையாளம் இல்லாத அநாதைகள் தானே” என்றான் ஒரு வித சோகத்தில்.
“ஆமாண்டா, வேற வழியில்லை, நம்ம அப்பாவோட ரேஷன் கார்டும் அதுல இருக்கிற நம்ம பேரும் தான் நமக்கான ஒரே அடையாளம்” என்றான் ராஜா அப்பாவியாக.

இரவு படுக்கையில் தனியாக உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறான் முத்து.
“வேலை தேடி வந்தவனுக்கு தன் தாய் நாட்டிலேயே இன்னும் அடையாளம் இல்லாத அநாதையாக
இருப்பதை நினைக்கையில் அழுகையாய் வந்தது. தாய் மற்றும் தந்தை அரவனைப்பில் எவ்வளவு சுகமாக இருந்தோம், இன்று தனிமை என்று வந்தவுடன் சமுதாய பிசாசின் கையில் எப்படி மாட்டி முழிக்கிறோம் என எண்ணி வாடிப் போனான்.

ஏன் நமக்கு அடையாளம் இல்லை, நாமும் இங்கேதானே பிறந்தோம், இடம் வேறு என்றாலும் இனம் ஒன்று தானே! சாதி வேறு என்றாலும் சதையும் ரத்தமும் ஒன்றுதானே!. 

18வயது நிரம்பாதவன் இந்தியாவில் இருந்தும் அடையாளம் இல்லாத அநாதைதானா?

இதை ஏன் யாரும் கேட்கவில்லை ? ஏன் எந்த சட்டமும் போடவில்லை? ஏன் எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை? எங்களுக்கு ஓட்டு இல்லாத காரணமா? இல்லை நாங்கள் ஒன்றும் தெரியாத சிறுவர்கள் என்ற மெத்தனமா?


இதை யாருக்காவது தெரிவிக்க வேண்டும்? யாருக்கு தெரிவிப்பது? ஆ! அப்துல் கலாம் அவருக்கு எழுதுவோம், ஆனால் முகவரி ? பரவாயிலை, இந்தியாவில் அவரை தெரியாதவன் இருக்க முடியாது”
என நினைத்துக் கொண்டு எழுதுகிறான்.

பெறுநர் :
 உயர்திரு. அப்துல்கலாம்,

 முன்னாள் குடியரசுத்தலைவர்,

இந்தியா.


அனுப்புநர் :

 முத்து,
 18வயது நிரம்பாத அடையாளம் இல்லாத 

 இந்தியன்.


அன்புள்ள அப்துல்கலாம் அவர்களுக்கு,

  அடையாளம் இல்லாத இந்தியன் எழுதிக்கொள்வது................

இன்னும் எழுதிகொண்டு இருக்கின்றனர் இதுபோல் ஆயிரம் முத்துகள் இந்தியாவில்..../

நண்பர்களே! இது என்னுடைய வாழ்வில் நான் அனுபவித்த விசயம், அந்த முத்து என் கதாபாத்திரமே!. மேலும் இது என்னுடைய நான் எழுதும் முதல் சிறுகதை இது..எனவே தவறு இருந்தால் மன்னிக்கவும்.
பின்னர் உங்கள் மேலான கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்...

Top Tamil Blogs by Tamilers

Wednesday, June 17, 2009

OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

ஏதோ பொழுது போகல, அதான் வந்து சும்மா ஒரு மொக்க பதிவு போடலாம்னு வந்தேன். என்னத்த போடுறதுன்னு ஒன்னும் புரியலை. சரி நமக்கு தெரிஞ்ச விசயத்த நாலு பேரு தெரிஞ்சுக்கட்டுமேன்னு தான் இந்த பதிவு.. நம்ம போன்ல பேசும் போது இல்ல வேற பிகர் முன்னாடு பேசும் போதும் என்னமோ அமெரிக்க ரிட்டர்ன் மாதிரி OK,...OK...OK.....னு பில்டப் பண்ணுவோம். அதோட உண்மையான அர்த்தம் என்ன அப்படின்னு நாம யோசிச்சிருப்போம்...

OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?  



முன்னொரு காலத்தில் போரில் இருந்து திரும்பி
வரும் படைகள் எந்த வித சேதாரமும் இன்றி வந்தால் (அதாவது எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல்) அதை ஒரு இடத்தில் “0 KILLED” என்று எழுதி மாட்டி வைப்பார்களாம்.அதிலிருந்து தான் OK – O.Killed என்று அர்த்தம் வந்தது.



ECHO என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?



கிரேக்க கடவுள் ஜுபிடர் தன் மனைவி ஜுனோவை ஏமாற்றும் பொருட்டு அவளோடு அரட்டை அடிக்க ஒரு இளம் அழகிய தேவதையை ஏற்பாடு செய்கிறார். அவ்வாறு தன் மனைவி அரட்டை அடிக்கும் சமயம் மற்ற பெண்களோடு உல்லாசமாக இருப்பது ஜுபிடரின் வழக்கம். ஒரு நாள் இதை அறிந்த ஜுனோ வெகுண்டு எழுந்து தன்னிடம் அரட்டை அடிக்கும் தேவதை எக்கோவை தண்டிக்கிறாள். அந்த தேவதையின் குரலைப் பறித்துக் கொண்டு அடுத்தவர்கள் பேசுவதில் கடைசி வார்த்தையை மட்டும் அவள் உச்சரிக்கும்படி செய்து சாபம் விடுகிறாள். அதனால்தான் நாம் பேசும் போது கடைசி சொல் மட்டுமே எதிரொலிப்பதை ஆங்கிலத்தில் அந்த தேவதையின் ஞாபகமாக எக்கோ (Echo) என்று பெயர் வந்தது.


பதிவு மொக்கையா இருக்குதுன்னு நீங்க என்னை மொக்க பண்ணாம ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்க சாமி.
Top Tamil Blogs by Tamilers

Wednesday, June 10, 2009

FUCK என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா? (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

  FUCK என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா? இந்த உலகமே இந்த ஒரு வார்த்தையின் அடிப்படை விளையாட்டில் தான் இவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த செயல் மட்டும் இல்லை என்றால் என்றோ நாம் சந்ததி இல்லாமல் அழிந்து போயிருப்போம். ஆனால் இந்த வார்த்தையும் இந்த செயலையும் பற்றி பேசினால் அநாகரிகம் என்ற தவறான முறையை இன்றும் நாம் முறை தவறாமல் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். செக்ஸ் கல்வியின் அவசியம் இந்தியா எய்ட்ஸில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தும் பல பேருக்கு புரியவில்லை.

சரி நம் விசயத்திற்கு வருவோம்..முற்கால இங்கிலாந்தில் அரசனின் அனுமதியில்லாமல் குடிமக்கள் யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அவர்களுக்கு குழந்தை வேண்டும் அல்லது உறவு வேண்டும் எனில் அரசனிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும். அப்போது அரசனிடமிருந்து ஒரு உலோக பட்டை அவர்களுக்கு அளிக்கப்படும்.
அதை அவர்கள் உறவு கொள்ளும் சமயம் தங்கள் வீட்டிற்கு வெளியே தொங்க விட வேண்டும். அந்த பட்டையில் Fornication Under the Consent of King என்று எழுதியிருக்கும். அதன்சுருக்கம் தான் FUCK (Fornication Under the Consent of King) என்ற வார்த்தை.


புரியுது, நீங்கள் முனுமுனுப்பது. அதெப்படி ஒவ்வொரு வீடாக வந்து பார்க்கவா போகிறார்கள் என்று..அக்கால்த்தில் அரசன் பேச்சை கேட்கும் ஒரு நல்ல குடிமக்களாக இருந்திருந்தால் வாய்ப்பு உள்ளது அல்லவா?. ஆனால் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது, இதனால் தான் மன்னர்கள் இரவு நேரங்களில் மாறு வேடம் பூண்டு நகர்வலம் வருகிறார்களோ என்று..

எல்லாரும் பல்ல நறநறன்னு கடிக்கற சத்தம் கேட்குது..இருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டு உங்க் வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...


Top Tamil Blogs by Tamilers

Monday, June 8, 2009

அண்ணன் தம்பி இருவரும் இரட்டையர்கள். ஆனால் தம்பி அண்ணனுக்கு இரண்டு நாள் முன்னதாக பிறந்த நாள் கொண்டாடுகிறான் எப்படி?

இரண்டு பேரும் இரட்டையர்கள். ஆன தம்பி முன்னாடியே பிறந்தநாள் கொண்டாடுறான்.என்னடா சின்னப்புள்ளத்தனமா இருக்குன்னு நீங்க நெனைக்கறது என் காதுல கேட்குது.இருந்தாலும் சொல்ல வேண்டிய நம்ம கடமைய பண்ணித்தான ஆகணும்.

அது ஒண்ணும் பெரிய விசயம் எல்லாம் இல்லைங்க. இந்த மூள வளர்ச்சி நம்மள விட  கொஞ்சம் அதிகமா வளர்ந்து ஒரு வெள்ளை சட்டைய மாட்டிக்கிட்டு எதாவது ஒரு ரூமுக்குள்ள விட்டத்த பாத்திட்டு இருப்பாங்களே....அதாங்க இந்த விஞ்ஞானினு சொல்லுவாங்களே...அவங்கதான். ஏற்கனவே கோக்குமாக்கா இருக்கற இந்த உலகத்துல
ஏகப்பட்ட கோடப் போட்டாய்ங்க.. அதுல ஒன்னுதான் இந்த “சர்வதேச தேதிக் கோடு (International Date Line)”.

அதாவது அந்த கோடு பயணம் செய்யற இடத்துல ஒரே நாட இருந்தாலும், ஒரே நாளா இருந்தாலும் கோட்டோட ஒரு பக்கம் ஒரு தேதி ஆகவும், இன்னொரு பக்கம் அடுத்த தேதி ஆகவும் இருக்குமாம். சும்மா சொல்லனும்னா, இப்போ நம்ம சென்னைய எடுத்துக்குவோம். நம்ம அண்ணா சாலை மேல அந்த கோடு போகுதுன்னு வச்சிக்கலாம். அப்போ அண்ணா சாலைக்கு இந்த பக்கம் இருக்கற திருவல்லிக்கேணில தேதி ஜுன் 8 அப்படின்னா, அண்ணா சாலைக்கு அந்த பக்கம் இருக்கற எழும்பூர்ல தேதி ஜுன் 7 ஆக இருக்குமாம். எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க...


சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...எல்லார்க்கும் ஒரளவு புருஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.
ஒரு சின்ன கதைல சொல்லுவோம். ஒரு அம்மா ஒரு படகுல போறாங்க..அவுங்க அந்த சர்வதேச நாள் எல்லைக் கோட்ட கடக்கறதுக்கு ஒரு நிமிசம் முன்னாடி அந்த நாட்டுல தேதி மார்ச் 1..அப்போ அண்ணன் பிறக்கிறான். அந்த கோட்ட கடந்த பின்னாடி அந்த நாட்டுல தேதி பிப்ரவரி 28. அப்போ தம்பி பிறக்கிறான். அவ்வளவு தாங்க.. கதை முடிஞ்சுது...இருங்க இருங்க! நீங்க அடிக்க வரது புரியுது..ஒரு நாள் தானே வித்தியாசம், எப்படி இரண்டு நாள்னு கேட்கிறது புரியுது..அதாவதுங்க இந்த லீப் வருடம் வரும் போது பிப்ரவரி 29 நாள் வருது. அதான்...அதே தான்...

எல்லாரும் பல்ல நறநறன்னு கடிக்கற சத்தம் கேட்குது..இருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டு உங்க வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...


Top Tamil Blogs by Tamilers

Tuesday, June 2, 2009

இந்தியா 2020 : வல்லரசு கனவை கனவாகவே மாற்றும் காரணிகள்!!!

இந்தியாவின் வல்லரசு கனவை கனவாகவே மாற்ற முயற்சிக்கும் காரணிகள் இவை:

 தவறு செய்தவனுக்கு தண்டனை
 நிச்சயம் – சட்டம் தன் கடமையைச் 
 செய்யும்...ஆனால் அரசியல்வாதி 
 ஆகிவிட்டால்? – சட்டம் அவன் கடமையைச்
 செய்யும்.


 ”ஜாதிகள் இல்லையடி பாப்பா”
 பொது மேடையில் புதிய
 ஜாதிக் கட்சி தலைவர் முழக்கம்..?

  கட்சிக்கு பயன் இல்லாததால்
  கூட்டணி மாறினோம் – அப்போது
  கொள்கை...? மக்கள்...?

  லஞ்சத்தை அடியோடு ஒழிப்போம்
  பொதுக்கூட்டத்தில் பேச பணம்
  வாங்கிய பேச்சாளர்..?  


  காவல் துறை உங்கள் நண்பன்
  அதனால்தான் அடிக்கடி கேட்கிறார்கள்
  வாராக்கடன் - எங்கும்..?

  பெண்களுக்கு 33% இட 
  ஒதுக்கீடு – மும்பையில் சிவப்பு
  விளக்கு பகுதிக்கு சிறப்பு அனுமதி.?

  எதிர்கால இந்தியா இளைஞர்
  கையில் – அரசு மதுக்கடையில்
  புதிதாக “பார்” வசதி அறிமுகம்
  அரசாங்க அறிவிப்பு...?


  ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக
  முறைப்படி ஓட்டுப்போட வேண்டும்.
  ஆனால் எத்தனை ஓட்டுகள்...?

  ஏற்றத்தாழ்வுகள் இல்லா சமுதாயம்
  படைப்போம் – தாழ்த்தபட்டோருக்கு தனி
  இட ஒதுக்கீடு கேட்கும் பேரணியின்
  முழக்கம்...?

  நடிகை காதலில் விழுந்தார்

  தலைப்புச் செய்தி – பட்டினியால்

 விவசாயி தற்கொலை கடைசிப்

  பக்க பொட்டிச் செய்தி ...?

  கோவிலில் கடவுளுக்கு பால்
  அபிஷேகம் – அடுத்த தெருவில்
  பாலில்லாமல் பச்சிளங்குழந்தை மரணம்..?

  காந்தி வழி நடப்போம்..புதுக்கட்சி
  தலைவர் முழக்கம் – ஆர்வமாய் கேட்ட
  கூட்டம். ஒரு கையில் பிரியாணியும்
  மறு கையில் காந்தி நோட்டுமாய்...?


  துடிப்பு மிக்க நூறு இளைஞரை
  கேட்டார் விவேகானந்தர் – ஆனால்
  இன்று நூறாயிரம் பேர் இருந்தும்
  ஒரு விவேகானந்தர் இல்லை.

   

  எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர் கையில்
  என்று எவனாவது சொன்னால் எட்டி மிதியுங்கள்.
  இவன் என்ன கிழித்தானாம் நமக்குச் சொல்ல. இருபது
  வருடத்திற்கு முன் அவன் கேட்ட அதே வாக்கியத்தை
  இன்றும் பிழை மாறாமல் சொல்ல மட்டுமே செய்கிறான்.
  எதுவும் செய்யவில்லை.


  நாமும் பிழை மாறாமல் சொல்ல போகிறோமா?
  இல்லை – பிழைகளை வெல்ல போகிறோமா?
  வேரூன்றி விட்டன விஷமங்கள்.. வெட்டி எடுக்க
  வீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.
  விண்ணைப் பிளக்கும் புரட்சி வேண்டும். போராடுங்கள்
  என்று மூன்றாம் மனிதனாய்ச் சொல்லவில்லை..போரிடுவோம்
  வாருங்கள் என்று முதல் மனிதனாய்ச் சொல்கிறேன்.

  நீயும் நானும் இளைஞர்கள்..உன்னுள் இருக்கும் சக்தி
  என்னுள் இருக்கும் புத்தி, புரட்டியெடுப்போம், புது
  சமுதாயம் படைப்போம். நமை வெல்ல எந்த நமனும்
  இல்லை. புன்னகை தேசத்தில் புது பூக்கள் படரவிடுவோம்...

  வா தோழா!!!. வாழ வைப்போம்!!! வாழ்ந்து காட்டுவோம்....

நண்பர்களே! ஏதோ எனக்கு தோன்றியதை கிறுக்கி உள்ளேன்.. நன்றாக இருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்...இல்லை என்றால் மறக்காமல் உங்கள் கருத்துகளை போடுங்கள்....


Top Tamil Blogs by Tamilers