Tamil 10

Tuesday, May 12, 2009

ரோமப் பேரரசன், சர்க்கஸ் விளையாட்டு மற்றும் கிளாடியேட்டர் படமும்:

ரித்திரத்தை ஒரு நிமிசம் திரும்பிபாருங்க!. அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒன்னுதான். நாம வாழனும்னா யார வேணா, எப்ப வேணா கொல்லலாம்.ஒரு அரசன் எப்படா சாவான் அப்படினு மக்கள் எதிர்பார்த்த அரசர்கள் வரிசைல முதலிடம் பிடிக்கும் மன்னன் ரோமப் பேரரசன் கலிக்யூலா.கிளாடியேட்டர் படத்துல வர மிகப் பெரிய அரங்கமும் அதில்மனிதர்களோடு மனிதர்களும்,விலங்குகளோடு மனிதர்களும்விளையாடும் கொடூர விளையாட்டான அந்த கால சர்க்கஸ் விளையாட்டைகண்டுபிடித்தவன் இந்த கலிக்யூலா. 

கி.பி.37-ல் சர்வாதிகாரி டைபீரியஸ் இறந்தவுடன் அரியணை ஏறியவன் அவனது மருமகனான கலிக்யூலா என்னும் கேயெஸ் சீசர் ஜெர்மானிகஸ்.
சிறுவயதில் ராணுவ வீரர்களுடன் போர்க்களம் சென்று ரத்தமும், சிதறிய உடல்களையும் பார்த்து மகிழ்வான் இந்த கொடூரன். செக்ஸ் விசயத்தில் பிஞ்சிலே பழுத்த பழம். முதன்முதலில் காதல் வயப்பட்டது தன் சொந்த சகோதரியிடம். அரியணை ஏறியவுடன் தன் சகோதரிகளின் கணவர்களை அடித்து துரத்தி விட்டு தன் படுக்கை அறைக்கு சகோதரிகளை கொண்டு வந்தவன்.

நாற்பதாயிரம் பேர் அமரக்கூடிய அந்த மாபெரும் அரங்கத்தில் புலிகளையும், கரடிகளையும் மனிதர்களோடு மோத விட்டு வேடிக்கை பார்த்தான். தினமும் கொண்டாட்டமும், குதூகலமும் ஆக இருந்ததால் அரசு கஜானா காலியாகிவிட்டது. இதனால் வீரர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது.
குறைவான சம்பளத்தின் காரணமாக இளைஞர்கள் போட்டியில் இருந்து விலகிவிட, வயதான கிழவர்களும் உணவில்லாமல் பட்டினி ஆக இருந்த நோஞ்சான் புலிகளும் மோதிக் கொள்வதை பார்த்த மக்கள் ஒழிக என்று கோஷமிட்டனர். அவ்வளவுதான் இதை கேட்ட கலிக்யூலா வீரர்களை ஏவி 
கோஷமிட்ட அனைவரது நாக்கையும் துண்டித்து நடு மைதானத்தில் இருந்த புலிகளுக்கு உணவாக்கினான். மேலும் உணவு பற்றாக்குறை காரணமாக விலங்குகளுக்கு ஜெயில் கைதிகளை கொன்று உணவாக்கினான்.

விபச்சார விடுதிக்கு சென்ற முதல் மன்னனும் இவனாகத்தான் இருக்க வேண்டும். அங்கு அவனுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது, அதை அடுத்த நாளே செய்தான். அரசவையை கூட்டி நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் என் சகோதரிகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த போகிறேன், எனவே எல்லா வி.ஜ.பி களும் தினமும் என் சகோதரிகளை
அனுபவிக்க ஆயிரம் பொற்காசுகள் எனவும், யாரெல்லாம் தினமும் வர வேண்டும் என ஒரு பட்டியலும் போட்டு கொடுத்தான்

உச்சகட்டமாக, தன் குதிரை இன்ஸியேட்டஸ்க்கு அரசவையில் கான்சல் பதவி கொடுத்தான். (கான்சல் பதவி என்பது நம்முடைய மத்திய காபினட் அமைச்சருக்கு சமம்). இறுதியாக தன்னுடைய பிரதான மெய்க்காவலன் 
காஷியஸ் செர்பீயா என்பவனால் குத்தி கொலை செய்யப்பட்டான்.
இவனது வெறியாட்டத்தின் ஒரு பகுதி தான் இது. இன்னும் பல கொடுமைகள் செய்த இவனது இறப்புக்கு ஊரே மகிழ்ச்சியில் திளைத்தது.. இத்தனைக்கும் இந்த் கலிக்யூலா ஜுலியஸ் சீசர் பரம்பரையில் வந்தவன். அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பேரன் ஆவான்...


வெறி பிடித்தவனை பதவியில் அமர வைத்தால் மக்களும் நாடும் என்ன ஆகும் என்பதற்கு இவனே சரியான உதாரணம்....



தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.






Top Tamil Blogs by Tamilers

4 comments:

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு வினோத்..

வினோத்குமார் said...

thanks vinoth for ur comments

வினோத் கெளதம் said...

Please Submit Ur posts In Tamilish and Tamilmanam..so Ur Posts and Ur blog will easily get familiar with other peoples..

Unknown said...

History said so many things....

Post a Comment